நாட்டில் நேற்று 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இருவர் மலேஷியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய இரண்டு பேருக்கும் கென்யா மற்றம் டுபாயில் இருந்து நாட்டிற்கு வருகை தந்த இருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 953 ஆக அதிகரித்துள்ளது. தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 805 ஆக உயர்வடைந்துள்ளது. இதேவேளை, வைத்தியசாலைகளில் 136 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.