யாழ். தென்மராட்சி வரணி வடக்கில் இளம் யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் நந்தகுமார் சதீசா (20-வயது) என்ற யுவதியே தற்கொலை செய்து மரணமடைந்துள்ளார்.

தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த குறித்த யுவதி பிறிதொரு நபருக்கு வழங்கிய பணம் திரும்பக் கிடைக்கப் பெறவில்லை என்றும், அதனால் தற்கொலை செய்வதாகவும் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.