ஈழ விடுதலை போராட்டத்தின் முதலாவது போராளி பொன்.சிவகுமாரனின் 70ஆவது பிறந்த தினம் இன்று நினைவுகூரப்பட்டது.சிவகுமாரன் நினைவுதின ஏற்பாட்டுக் குமுவினரின் ஏற்பாட்டில், இன்று காலை 8.30 மணிக்கு உரும்பிராயில் உள்ள அவரது நினைவிடத்தில் நடைபெற்றது. ஏற்பாட்டு குழு உறுப்பினர் செந்தூரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிவகுமாரனின் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.