யாழ் போதனா வைத்தியசாலையில் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபடும் பெண் ஊழியர் ஒருவர் இன்று பிற்பகல் மாடிக் கட்டடத்திலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார். பளையைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் பணியாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். யாழ் போதனா வைத்தியசாலை 17ம் நோயாளர் விடுதியிலிருந்தே அப் பெண் நிலத்தில் வீழ்ந்துள்ளார். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.