லெபனானில் அண்மையில் இடம்பெற்ற பாரிய வெடிச்சம்பவத்தில் மேலும் 2 இலங்கையர்கள் காயமடைந்துள்ளமை தெரியவந்துள்ளது. அவர்களில் ஒருவருக்கு தலையில் பாரிய காயம் ஏற்பட்டுள்ளதுடன் மற்றையவருக்கு கால் முறிவடைந்துள்ளதாக லெபனானுக்கான இலங்கை தூதுவர் ஷானி கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார். தலையில் காயம் ஏற்பட்டவர், அலுவலக சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டவர் எனவும் மற்றையவர் வீடொன்றில் பணியாற்றியவர் எனவும் அவர் கூறியுள்ளார்.

அவர்களின் நிலை குறித்து ஆராய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக லெபனானுக்கான இலங்கை தூதுவர் தெரிவித்தார். லெபனானில் இடம்பெற்ற பாரிய வெடிச் சம்பவத்தில் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. லெபனானில் 25,000 இலங்கையர்கள் பணியாற்றுகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.