சர்வதேச பொலிஸ் அமைப்பான இண்டர்போலிடம் இருந்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் 14 சிகப்பு அறிவித்தல்களை பெற்றுக் கொண்டுள்ளது. இலங்கையில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட நிலையில் வெளிநாடுகளில் தலைமறைவாகியிருக்கும் 14 சந்தேகநபர்களை கைது செய்வற்காக குறித்த சிகப்பு அறிவித்தல் பெறப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.