கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3104 ஆக அதிகரித்துள்ளது.ஏற்கனவே 3102 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் இன்றுமாலை மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டனர். குறித்த இருவரும் இந்தியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் என கூறப்பட்டுள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2889 ஆக காணப்படுகின்றது. அதேபோல், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 203 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் கூறப்பட்டுள்ளது. இலங்கையில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 12 என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.