அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்ற 20ஆவது அரசியலமைப்பு திருத்தம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 20ம் திருத்தச் சட்டமூல வரைவிற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ள நிலையில், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நிபுணர் குழுவும் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து இன்று காலை 20ம் திருத்தச் சட்டமூல வரையானது அரச அச்சக திணைக்களத்திற்கு வர்த்தமானியில் பிரசுரிக்கப்படுவதற்காக அனுப்பப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.