அம்பாறை சங்கமாங்கண்டி கடற்பரப்பில் தீப்பற்றிய எம்.டி நியுவ் டயமன்ட் கப்பல் கடல்பரப்பின் 40 மைல் தூரத்திற்கு அப்பால் கொண்டு செல்லப்பட்டதன் பின்னர் அதனை கண்காணிப்பதற்காக 11 படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. இந்த பணியில் இந்திய கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான அமெயா என்ற கப்பலும் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. எம்.டி நியுவ் டயமன்ட் கப்பலில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள போதிலும் அதில் உள்ள எண்ணெய் கடலில் கலப்பதற்கான காரணிகள் உள்ளனவா என்பது குறித்து அதிகம் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் இந்திய கடலோர பாதுகாப்பு படை அதன் உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளது.