மட்டக்களப்பு வாகரை பிரதேச மீள்குடியேற்ற கிராமமான குகனேசபுரத்தில் நேற்றுமாலை குளத்தில் நீராடச்சென்ற 12வயதுச் சிறுமி நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். குகனேசபுரம் காளிகோவில் வீதி 06ம் குறுக்கைச் சேர்ந்த சன்முகநாதன் விஜயரூகினியும் அவரது சகோதரியும் ஆலங்குளத்திற்கு குளிக்கச்சென்றபோதே சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆலங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 06ல் பயிலும் சண்முகநாதன் விஜயரூகினி என்ற மாணவியே பலியாகியுள்ளார்.