முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூன்று பேரை, நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. ஒக்டோபர் 29ம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டு மோதரை மீன்பிடி துறைமுகத்தை குத்தகைக்கு விட்டு அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்படுத்தியதாக தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்காகவே அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, கடற்றொழில் கூட்டுத்தாபன முன்னாள் தலைவர், முன்னாள் முகாமையாளர் ஆகியோரை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எதிர்வரும் 29ஆம் திகதி ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.