மட்டக்களப்பு சித்தாண்டியில் 81வயது முதியவர் ஒருவர் துக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்றுகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சித்தாண்டி பிரதான வீதியைச் சோந்த பிள்ளையான் விஸ்வநாதன் என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த முதியவரின் உறவினர்கள் சம்பவதினமான நேற்று இரவு வீட்டில் இல்லாத நிலையில் தனிமையில் இருந்த முதியவர் வீட்டின் அறையிலன் கூரையில் கயிற்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.