MT New Diamond கப்பலில் உள்ளே காணப்படும் எண்ணெய் மாதிரியை பெற்றுக்கொள்ளுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும் MT New Diamond கப்பலின் பிரதானி உள்ளிட்ட 23 உறுப்பினர்களிடம் இருந்தும் வாக்குமூலங்களை பதிவு செய்யுமாறும் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன் அடிப்படையில் எண்ணெய் மாதிரியை பெற்றுக் கொள்ளுமாறு கடல் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அதிகார சபைக்கும், உறுப்பினர்களிடம் இருந்தும் வாக்குமூலங்களை குற்றப் புலனாய்வு பிரிவினருக்கும் பதிவு செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.