பூஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முக்கிய குற்றவாளிகள் சிலர் ஆரம்பித்த உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்துள்ளததாக தெரிவிக்கப்படுகின்றது.ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளான ´பொடி லெசி´, ´வெலே சுதா´ மற்றும் ´கஞ்ஜிபானி இம்ரான்´ உள்ளிட்ட 28 கைதிகள் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை பூஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 43 கைதிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தனர்.

அவர்களில் 15 பேர் பின்னர் உண்ணாவிரத போராட்டத்தை இடையில் கைவிட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்திருந்தது.