சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா டீ.டெப்லிட்ஸ் ஆகியோருக்கிடையில் சபாநாயகர் அலுவலகத்தில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, சர்வதேச அபிவிருத்தி தொடர்பான அமெரிக்க முகவர் நிலையத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் Reid Aishiman உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர். பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்கவும் இந்த சந்திப்பில் பங்குபற்றியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.