மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி திருப்பழுகாமம் பகுதி வீடொன்றில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. மேளவாத்திய கலைஞரான புவிதாசன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு ஆலயம் ஒன்றுக்கு மேள வாத்தியம் இசைக்க சென்ற நிலையில் இன்று காலை தனது வீட்டின் முன்பகுதியில் குறித்த இளைஞர் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது