மட்டக்களப்பு செங்கலடியில் நேற்றுமாலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியகியுள்ளார். வேகமாக சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாக சென்றோரை மோதியுள்ளது. இதன்போது ஒருவர் பலியானதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர். கொம்மாதுறையைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான சிவசுப்பிரமணியம் ரமேஷ்குமார் (வயது-40) என்பவரே உயிரிழந்துள்ளார்.