முல்லைத்தீவு கேப்பாப்பிலவு படைமுகாம் அண்மித்த காட்டுப்பகுதியில் இருந்து, நேற்று அகற்றப்பட்ட நிலையில் காணப்பட்ட 654 வெற்று மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றை சோதனை செய்தபோது, அவற்றில் இருந்து வெடிபொருள்கள் அகற்றப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. போரின் போது, தமிழீழ விடுதலைப் புலிகளால் கைவிடப்பட்டுள்ள மிதிவெடிகளாக இவை இருக்கலாமென படையினர் சந்தேகம் தெரிவித்துள்ளார்கள்.