இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3287 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 3284 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் இன்றுமாலை மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டனர். அத்துடன், நாட்டில் கொவிட் 19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 18 பேர் இன்று குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் 19 தொற்றினால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 88 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 182ஆக குறைந்துள்ளது.