வவுனியா வடக்கு கட்டையர்குளம், மதியாமடு பகுதியில் கிணற்றில் இருந்து பெருமளவான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் தனியார் காணி ஒன்றில் அமைந்துள்ள கிணற்றை அதன் உரிமையாளர் இன்று துப்புரவு செய்த போது இவை கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் கிணற்றிலிருந்து 8 மோட்டார் செல்லினை மீட்டுள்ளனர். நீதிமன்ற அனுமதி பெற்ற மேலதிக அகழ்வு பணி முன்னெடுக்கப்படவுள்ளது.