தென் ஆபிரிக்காவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலய ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று முன்தினம் அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். 35 வயதுடைய கிளிநொச்சியை சேர்ந்த நபர் ஒருவரே தற்கொலை செய்து கொண்டுள்ளார். பிரேத பரிசோதனையின் பின்னர் உயிரிழந்தவரின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவரநடவடிக்கை எடுக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயனாத் கொலம்பகே மேலும் தெரிவித்துள்ளார்.