மலர்வு – 1943.09.19 உதிர்வு – 2020.09.23

யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், மன்னார் பெற்றாவை வாழ்விடமாகவும் கொண்ட வைத்தியக் கலாநிதி ஆறுமுகம் அரசக்கோன் அவர்கள் நேற்று (23.09.2020) புதன்கிழமை காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய (புளொட்) நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம்.

இனப்பற்றும், தமிழ் மக்களின் அரசியலில் மிகுந்த ஈடுபாடும் கொண்ட இவர் காந்தீயம் அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளராவார்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர் நண்பர்களுடன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந் துயரினைப் பகிர்ந்து கொண்டு எமது அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)