இலங்கையில் புதிய ஆயிரம் ரூபா நாணய தாள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ டீ லக்ஷ்மனினால் நேற்று புதிய நாணயத்தாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கி ஆளுநர் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இடையில் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்திப்புஇடம்பெற்றுள்ளது. இதன்போது புதிய ஆயிரம் ரூபா நாணயத்தாள் வெளியிடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.