மட்டக்களப்பு வெருகல் ஆற்றை இன்றுகாலை தோணியில் கடக்க முற்பட்ட ஒருவர் தோணி கவிழ்ந்ததில், ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டதாக வாகரை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சேருநுவரவைச் சேர்ந்த குழந்தைவேல் கணேசமூர்த்தி என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.