தனு றொக் வாள் வெட்டுக்குழுவின் தலைவர் தனுவின் மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வாள்வெட்டில், படுகாயமடைந்த தனு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. காரில் பயணித்த நபர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்த தனுவை யாழ் பெருமாள் கோவில் பகுதியில் வைத்து இன்று நண்பகல் வழிமறித்து துரத்தி அருகிலிருந்த தனியார் கல்வி நிலையத்தில் வைத்து வெட்டியுள்ளனர். அங்கு சென்ற விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதுடன், சம்பவ இடத்தில் கார், வாள்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக யாழ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.