தேசிய கல்வியியல் கல்லூரிகளிலிருந்து வெளியாகிய டிப்ளோமாதாரிகளின் நியமனம் தாமதமடையும் எனத் தெரியவருகிறது. ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதமளவில் வழங்கப்படும் இந்நியமனம் இவ்வருடம் நவம்பர் மாதத்தைக் கடக்கும் எதிர்வு கூறப்படுகிறது.. இறுதிப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டிருந்த போதிலும், கற்பித்தல் பயிற்சி தொடர்பான இறுதிப் பெறுபேறுகள் இதுவரை வெளியிடப்படாத காரணத்தினாலேயே இந்நியமனம் தாமதமடையும் என தெரியவருகிறது. இறுதிப் பரீட்சைப் பெறுபேறுகள் தயாரிக்கப்பட்டுள்ள போதிலும் அடுத்த வாரம் அளவிலேயே அனுமதிச் செயன்முறைக்கு முன்வைக்கப்படும் என்றும் அனுமதிக்கப்பட்டதன் பின், நியமனத்திற்கான செயன்முறை ஆரம்பமாகும் என்றும் தெரியவருகிறது. ஏற்கனவே, கொரோனா நெருக்கடி காரணமாக இறுதிப்பரீட்சைகளும், கற்பித்தல் பயிற்சிகளும் மீள் திகதியிடப்பட்டிருந்தன.