Header image alt text

கிரேட் பிரிட்டனில், தொற்றுநோய் தொடங்கிய பின்னர் முதல் முறையாக 7,000 க்கும் மேற்பட்ட புதிய கொரோனா வழக்குகள் செவ்வாய்க்கிழமை கணக்கிடப்பட்டன. பொறுப்பான அரசு நிறுவனம் அறிவித்தபடி மொத்தம் 7142 புதிய நோய்த்தொற்றுகள் ஏற்பட்டன. கூடுதலாக, ஒரு வாரத்திற்குள் புதிய இறப்புகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியது: கடந்த வாரம் கொரோனா நோய்த்தொற்றுடன் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 37 வழக்குகள், செவ்வாயன்று 71 இறப்புகள். மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.

Read more

MCC ஒப்பந்தம் தொடர்பாக அரசாங்கம் இதுவரை எந்தவொரு பேச்சுவார்த்தையையும் நடத்தவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார். இலத்திரனியல் ஊடக செய்திப் பிரிவு தலைவர்கள் மற்றும் செய்தி ஆசிரியர்களை சந்தித்தபோதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். அலரி மாளிகையில் இன்று முற்பகல் நடைபெற்ற இந்த சந்திப்பில் 20 ஆவது திருத்தம் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டது. Read more

பாராளுமன்றத்தில் குழுநிலை சந்தர்ப்பத்தின் போது 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தில், ஆளும் தரப்பினரால் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்கள் தொடர்பான அறிக்கையை சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா உயர் நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பித்தார். அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதியர்கள் குழாம் பரிசீலிக்கின்றது. Read more

கண்டி பூவெலிகட சங்கமித்தா வீதியிலிருந்த ஐந்து மாடி வீடொன்று கடந்த வாரம் தாழிறங்கியதில் மூவர் உயிரிழந்தமை தொடர்பில், கைது செய்யப்பட்ட வீட்டின் உரிமையாளர் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த வீட்டின் உரிமையாளரான அநுர லெவ்கே, பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முற்பகல் கைது செய்யப்பட்டிருந்தார். Read more

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3,374ஆக அதிகரித்துள்ளது.

தெரிவுக்குழு கூட்டத்தின் போது அரசியலமைப்பில் முன்மொழியப்பட்ட 20 ஆவது திருத்தத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய 53 திருத்தங்கள் அடங்கிய ஆவணத்தை சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா இன்று உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். நாடாளுமன்றத்தை ஒருவருடத்தில் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டரை ஆண்டுகளின் பின்னரே நாடாளுமன்றத்தை கலைக்க முடியும் என திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட நாடுகள் பட்டியலில் 2ஆவது இடத்தில் இலங்கை உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக புகழ்பெற்ற வை.ஐ.சி.ஏ.ஐ (YICAI) ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுத்த அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (28) வடக்கு கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் நிலையில் வட மாகாணம் முழுமையாக முடங்கியுள்ளது. கிழக்கில் பல பகுதிகளிலும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது

நாட்டில் இதுவரை 282,197 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக COVID – 19 ஒழிப்பு தேசிய படையணி தெரிவித்துள்ளது. நேற்றைய தினத்தில் (27) மாத்திரம் 1,410 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதற்கமைய, இன்று (28) காலை வரை கந்தக்காடு மற்றும் சேனபுர புனர்வாழ்வு நிலையத்தில் அடையாளம் காணப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 650 ஆக அதிகரித்துள்ளது. Read more

இலங்கைக்கான ஜப்பான் நாட்டின் தூதுவர் சுஜியாமா அக்கீரா, தென்கிழக்குப் பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்துக்கு, நல்லெண்ண விஜயமொன்றை, இன்று (28) மேற்கொண்டு, நூலகத்துக்கு நூற் தொகுதியைக் கையளித்தார். நிப்பொன் பவுண்டேஷன் அமைப்பால் ‘சமகால ஜப்பானை அறிந்து கொள்ள நூறு ஜப்பானிய புத்தகங்களை வாசியுங்கள்’ எனும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ், பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீமிடம் ஒரு தொகுதி புத்தகங்களை தூதுவர் சுஜியாமா அக்கீரா கையளித்தார். Read more