யாழ்ப்பாணம் நீர்வேலி சந்திக்கு அண்மையாக உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் தனு ரொக் வாள் வெட்டு குழுவின் தலைவராக கருதப்படும் தனுவின் நண்பன் மீது சராமாரியாக வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளது. இதன்போது மகனைக் காப்பாற்ற முற்பட்ட தாயார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இருவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த வன்முறைச் சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பு.சிவா (வயது -30) அவரது தயார் ரேணுகா (வயது -50) ஆகிய இருவர் மீதே வீடு புகுந்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பலே இந்தத் தாக்குதலை முன்னெடுத்துள்ளது என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வன்முறைக் கும்பல் வாள்கள், கம்பிகள் கொண்டே தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.