MT NEW DIAMOND கப்பலை இலங்கை கடற்பரப்பில் இருந்து அகற்றுவதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. இவ்வாறு குறித்த கப்பல் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். பணம் மற்றும் நட்டஈடு வழங்கும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் கப்பலை அகற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது கப்பலை இந்நாட்டு கடற்பரப்பில் இருந்து இழுத்துச் செல்லும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.