ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன்பாகவே தனது நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த ட்ரம்ப், தானும் தனிமைப்படுத்திக் கொள்ளப் போவதாக கூறியிருந்தார். இந்நிலையில் ட்ரம்ப் மற்றும் மெலனியா ட்ரம்ப் ஆகியோரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளிவந்தன. அதில், இருவருக்கும் பொசிட்டிவ் என வந்துள்ளது. இத்தகவலை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் ட்ரம்ப். அத்துடன், உடனடியாக தனிமைப்படுத்தும் நடைமுறை மற்றும் சிகிச்சையை தொடங்க உள்ளதாகவும் அவர் கூறி உள்ளார். டொனால்ட் ட்ரம்பிற்கு ஆரம்பகட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளதாக டொனால்ட் ட்ரம்பின் குடும்ப மருத்தவர் தெரிவித்துள்ளார். அதேபோல், எந்தவித இடையூறும் இல்லாமல் டொனால்ட் ட்ரம்ப் தனது கடமைகளை முன்னெடுப்பார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.