மகாத்மா காந்தியின் 151 ஆவது பிறந்ததினம் யாழ்ப்பாணத்தில் இன்றுகாலை அனுஷ்டிக்கப்பட்டது. யாழ் போதனா வைத்தியசாலை முன்பாக அமைந்துள்ள காத்தியடிகளின் நினைவு தூபிக்கு அருகாமையில் நடைபெற்றது. யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாடடில் நடைபெற்ற இந்நிகழவில் காந்தியின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. இதன்போது இந்திய துணைத் தூதுவர் கே. பாலசந்திரன், மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து அரசியல் பிரமுகர்கள் கல்விமான்கள் மதத் தலைவர்கள் என பலரும் மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர். நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவஞானம் சிறிதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமசந்திரன், எஸ். சரவணபவன், எம்.கே சிவாஜிலிங்கம், மாகாண சபை அவைத் தலைவர் சிவஞானம், முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன், யாழ் பல்கலைகழக துணைவேந்தர் சிறிசற்குணராசா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது காந்திய வழியை பின்பற்றியதாக மாணவி ஒருவர் கௌரவிக்கப்பட்டு துணைதூதுவரால் பரிசிலும் வழங்கி வைக்கப்பட்டது.