சர்வதேச மது ஒழிப்பு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. இதை முன்னிட்டு நாட்டின் சகல மதுபான கடைகளும் இன்று மூடப்படவுள்ளது. தடையுத்தரவுகளை மீறி மதுபான விற்பனை மற்றும் அது தொடர்பான நடவடிக்கையில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் நாளை மதுபானம் விற்பனை செய்யும் நபர்களை கண்டறிய 900 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபடுவார்கள் என்றும் திணைக்களம் கூறியுள்ளது.இதேவேளை சர்வதேச ரீதியில் வருடாந்தம் சுமார் 3 மில்லியன் மக்கள் மதுபான பாவனையின் காரணமாக உயிரிழந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.