நாட்டின் பல பிரதேசங்களில் விசர்நாய் கடிக்கு உள்ளாகும் சந்தர்ப்பங்கள் அதிகரித்து வருவதாகவும், இதனால் மக்கள் மிகுந்த அவதானமாக இருக்கும்படியும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. காலி யட்டலமத்த பிரதேசத்தில் ஒரே வாரத்தில் இரண்டு பேர் விசர் நாய் கடிக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 12 வயது பாடசாலைச் சிறுவன் மற்றும் 57 வயது குடும்பஸ்தர் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்திருக்கின்றனர். இந்த அவதானத்தை அடுத்து சுகாதார அதிகாரிகள், விசர்நாய்களைப் பிடித்து ஊசியேற்றும் நடவடிக்கையில் துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர்.