யாழ். புங்குடுதீவில் பூசகர் ஒருவர் குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரை அடித்துக் கொலை செய்துவிட்டு சடலம் அங்கு கொண்டுவந்து போடப்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஊரதீவு சிவன் ஆலய குளக்கரையிலேயே அவரது சடலம் இன்று அதிகாலை கண்டறியப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். ஊரதீவுச் சிவன் கோவில் பூசகர் ரூபன் சர்மா என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.