யாழ். வேலணை பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட அல்லைப்பிட்டி, வெண்புறவிநகர் கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்து. கடந்த மாதம் 30ம் திகதி இந்தியா தமிழ்நாடு, இராமேஸ்வரம், தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த மீனவர் ஒருவர் கடலில் தவறி விழுந்திருந்ததாகவும், குறித்த சடலம் அவருடையதாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக ஊர்காவல்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.