முகக்கவசம் அணியாக பயணிகள் பஸ்களில் ஏறுவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என, இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, ஆசனங்களின் எண்ணிகைக்கு மாத்திரம் பயணிகளை ஏற்றுவது தொடர்பில் இதுவரை உத்தியோகப்பூர்வமாக தமக்கு அறிவிக்கப்படவில்லை என, அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார். எனினும், பாடசாலை விடுமுறை என்பதால் பயணிகள் எண்ணிகை குறைவடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நிலவும் சூழ்நிலையால் அனைத்து இருக்கைகளிலும் பயணிகள் இருப்பது சந்தேகமே என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.