20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள 39 மனுக்கள், இன்று நான்காவது நாளாகவும் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் பரிசீலிக்கின்றது. உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 39 மனுக்களில் 37 மனுக்கள் தொடர்பில் விடயங்களை தெளிவுப்படுத்தவே கடந்த வாரம் அனுமதி வழக்கப்பட்டிருந்தது. சிவில் பிரஜைகளால் தாக்கல் செய்யப்பட்ட 02 மனுக்கள் குறித்து சபாநாயகருக்கு அறிவித்தல் அனுப்பப்படாததால் அந்த இரண்டு மனுக்கள் குறித்தும் தெளிவுப்படுத்தல்களை சமர்பிக்க உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை.,