கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள பெண்ணின் மகளுக்கு, கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டதன் பின்னர், அவருடன் ஒன்றாகக் கல்வி கற்ற, 31 மாணவர்களும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனரென சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்த சிறுமி, திவுலப்பிட்டிய பிரதேசத்திலுள்ள பிரதான பாடசாலையொன்றில் கல்வி கற்று வந்துள்ளதுடன், இச்சிறுமி தினமும் பாடசாலைக்குச் சமூகமளித்துள்ளதாகவும் பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.