மினுவாங்கொடை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களை தனிமைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தின் சிற்றுண்டிச்சாலையில் பணிபுரியும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், குறித்த உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் PCR பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.