புதிய கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ள  மற்றுமொரு நபரொருவர், பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்கு சென்று வந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.செப்டம்பர் மாதம் 27ஆம் திகதியே இவர் புத்தகக் கண்காட்சிக்கு சென்று வந்துள்ளதுடன், இவரது மனைவி வைத்தியர் என்றும், அவர் பிரசவ விடுமுறையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரன்டிக்ஸ் நிறுவனத்தில் தொழில்புரியும் இவர், கல்கிஸ்ஸ- படோவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்தவரென்றும் கொள்ளுப்பிட்டியவிலுள்ள பிரண்டிக்ஸ் நிறுவனத்தின் பிரதான அலுவலகத்துக்கும் சென்று வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.