மட்டக்களப்பு மாவட்ட எல்லையில் உள்ள மேய்ச்சல் தரைக் காணியில் அத்துமீறி குடியேறியோரை வௌியேற்றுமாறு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று இன்று (17) முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் என்.விஸ்னுகாந்தனின் ஏற்பாட்டில், காந்திப் பூங்கா முன்னால் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கை மக்கள் தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மயிலந்தமடு, மாதவனை பகுதியில் கால்நடை பண்ணையாளர்களின் கேரிக்கையை  நிறைவேற்றவும், மயிலந்தமடு, மாதவனை மேச்சல் தரையினை எமது மட்டக்களப்பு மாவட்ட கால்நடை பண்ணையாளர்களுக்கு சட்ட ரீதியாககைளிக்கவும், பல ஆண்டுகளாக எமது மாவட்ட கால் நடை பண்ணையாளர்கள் தமது கால் நடைகளை பராமரித்த காணியை அபகரிக்கவேண்டாமெனவும் ஆர்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.