அமெரிக்க உயர் இராணுவ அதிகாரிகள் உள்ளடங்கிய குழுவினர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இலங்கைக்கு வருகை தரவுள்ள நிலையிலேயே இவர்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்கும் மேலதிகமாக மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகள் 16 பேர் அடங்கிய குழுவினர் கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானமூடாக கடந்த 21ம் திகதி கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

இராணுவ அதிகாரிகளும் வந்ததாக கூறப்பட்ட நிலையில் அதனை மறுத்துள்ள அமெரிக்க தூதரகம், இராஜாங்க திணைக்கள அதிகாரிகளே வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.