மட்டக்களப்பு – கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வாழைச்சேனை, ஓட்டமாவடி பிரதேசத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாக, இன்று (26) அடையாளம் காணப்பட்டுள்ளது.இதனையடுத்து, தொற்றாளர் எண்ணிக்கை 27ஆக உயர்வடைந்துள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன் தெரிவித்தார்.
ஏற்கெனவே, கடந்த சனிக்கிழமை (24) பேலியகொடை மீன்சந்தைக்கு வியாபாரத்துக்குச் சென்ற மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர்களுடன் தொடர்புபட்ட 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது பிசிஆர் பரிசோதனைகளில் உறுதியாகியிருப்பதாக பணிப்பாளர் தெரிவித்தார்.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களாக இதுவரை 43 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.