கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணித்தவர்களின் எண்ணிக்கை 19ஆக அதிகரித்துள்ளது,தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்ற 19 மற்றும் 75 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

வாழைத்தோட்டம் மற்றும் கொழும்பு 2 பகுதிகளைச் சேர்ந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

முன்னதாக, ஐடிஎச் இல் சிகிச்சைப்பெற்றுவந்த 42 வயதான நபர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.

இதனை, சுகாதார அமைச்சு அறிவித்துள்ளதுடள், அவர் ஜா-எல பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த ஒருவாரத்துக்குள், கொ​ரோனா வைரஸால் தொற்றால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 6ஆக அதிகரித்துள்ளது.