கொழும்பு குற்றவியல் பிரிவைச் சேர்ந்த 14 அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனை, குறித்த பிரிவின் உயர் அதிகாரியொருவர் லங்காதீப இணையத்துக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த பிரிவைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் முன்னதாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியமை கண்டறியப்பட்டது.

அதன் பின்னர் அவருடன் தொடர்புகளை பேணிய ஏனைய 20 அதிகாரிகளுக்கு பி.சி.ஆர். சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

அந்த பி.சி.ஆர். சோதனை முடிவுகளில் 13 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.