கொரோனா தொற்றாளர் 20ஆவது நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இன்று மரணமானார்.இதனை கொழும்பு சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.  இவர், கொழும்பு-12, ​இல்  வசிக்கும் 54 வயது பெண் ஆவார்.

நீரிழிவு நோயாளியான இவர், வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருபவர் என தெரிவிக்கப்படுகின்றது.