வவுனியா பூவரசங்குளத்தை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட திரு. முத்தையா வில்வராசா (தோழர் சதீஸ்) அவர்கள் 11-11-2020 புதன்கிழமை காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய (புளொட்) நாம் ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.ஆரம்ப காலங்களில் காந்தீயம் அமைப்பில் இணைந்து செயற்பட்டு வந்த இவர், தொடர்ந்து கழகத்தின் செட்டிகுளம் பிரதேச உதவிப் பொறுப்பாளராகவும் இருந்தார்.

பின்னர் ஆசிரியராக பணியாற்றிய போதிலும் மரணிக்கும் வரை கட்சிப் பணிகளில் மிகுந்த அக்கறை கொண்டு செயற்பட்டு வந்தார்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர் நண்பர்களுடன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந் துயரினைப் பகிர்ந்து கொண்டு எமது அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)