இலங்கைக்கு வருகை தர முடியாமல் 4 வௌிநாடுகளில் சிக்கியிருந்த 92 பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

ஐ.நா அமைதி காக்கும் படையில் பணியாற்ற சூடான் சென்ற இராணுவ அதிகாரிகள் 79 பேரும் கட்டாரிற்கு தொழிலுக்காக சென்ற 12 பேரும் இவ்வாறு வருகை தந்துள்ளனர்.

அத்துடன் பாகிஸ்தானில் தங்கியிருந்த 5 இலங்கையர்களும் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.