நாட்டில் மேலும் 5 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு 10 பிரதேசத்தை சேர்ந்த 65 வயதுடைய ஆண் ஒருவரும், இரத்மலானை பிரதேசத்தை சேர்ந்த 69 வயதுடைய பெண் ஒருவரும், கிருலபனை பிரதேசத்தை சேர்ந்த 71 வயதுடைய பெண் ஒருவரும் , கொழும்பு 02 பிரதேசத்தை சேர்ந்த 81 வயதுடைய பெண் ஒருவரும் மற்றும் தெமடகொட பிரதேசத்தை சேர்ந்த 82 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.