மேல் மாகாணத்தில் இதுவரையில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 12,418 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஒக்டோபர் மாதம் 4 திகதி முதல் இதுவரையில் கொழும்பு மாவட்டத்தில் 6,141 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏனைய மாவட்டங்களில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம் பின்வருமாறு,

கம்பஹா – 5,667
களுத்துறை – 610
கண்டி – 278
குருநாகல் – 245
காலி – 183
கேகாலை – 139
இரத்தினபுரி – 133
மட்டக்களப்பு – 71
புத்தளம் – 65
அநுராதபுரம் – 52

எவ்வாறாயினும் ஏனைய 14 மாவட்டங்களில் இருந்து 50 இற்கும் குறைவான தொற்றாளர்களே இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.